Tamil News
Home செய்திகள் இத்தகைய முன்மொழிவுகள் இயல்பானவை – பொது ஜனாதிபதி வேட்பாளர் முன்மொழிவு  தொடர்பில் மனோ கணேசன்

இத்தகைய முன்மொழிவுகள் இயல்பானவை – பொது ஜனாதிபதி வேட்பாளர் முன்மொழிவு  தொடர்பில் மனோ கணேசன்

தமிழ் மக்களின் சாா்பில் ஜனாதிபதித் தோ்தலில் பொது வேட்பாளராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவா் மனோ கணேசன் களமிறக்கப்பட வேண்டும் என்று இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவா் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்திருந்தாா்.

இதற்கு பதிலளித்துள்ள மனோ கணேசன், “இரண்டரை  தசாப்தங்களுக்கு மேலான அரசியல் வரலாற்றை கொண்ட நான், இன்று ஒரு கட்சி மற்றும் பரந்து பட்ட அரசியல் கூட்டணியின் தலைவர். இந்நிலையில், இதுபற்றி இதைவிட கருத்து எதுவும் கூற நான் விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மனோ கணேசன் தெரிவித்திருப்பவை வருமாறு –

“சமூக பரப்பில், அவரவர்  கொண்டுள்ள நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில்  இத்தகைய முன்மொழிவுகளை தெரிவிக்க எவருக்கும் உரிமை உண்டு. இதற்கு முன்னாலும் இந்த முன்மொழிவு முன் வைக்க பட்டது.

ஆனால், இது பற்றி என்னிடம் நேரடியாக உரையா டவில்லை. பொது வெளியில் இருக்கின்ற, நாடெங்கும் அறியப்பட்ட அரசியல்வாதிகள் தொடர்பில் இத்தகைய கருத்துகள் அவ்வப்போது  தெரிவிக்க படுவது இயல்பானது.

இரண்டரை  தசாப்தங்களுக்கு மேலான அரசியல் வரலாற்றை கொண்ட நான், இன்று ஒரு கட்சி மற்றும் பரந்து பட்ட அரசியல் கூட்டணியின் தலைவர். இந்நிலையில், இதுபற்றி இதைவிட கருத்து எதுவும் கூற நான் விரும்பவில்லை” என மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளாா்.

Exit mobile version