வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
அண்மையில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் சில வீடுகளுக்குள் வன்முறை கும்பல் புகுந்துதாக்கி விட்டு தப்பிச் சென்றது. மறுநாளும் அந்தக் குழு தாக்குதல் நடத்தச் சென்ற நிலையில் அவர்களில் நால்வரை ஊரவர்கள் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் ஊரவர்கள் நடத்திய விசாரணையில் பொலிஸ் உத்தியோகத்தர் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர்.
பிடிபட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பொலிஸார் அவர்களை மன்றில் முன்னிலைப்படுத்தினர். பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பிலும் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வன்முறைக் குழுவுக்கு உதவிய பொலிஸ் அதிகாரியை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.