Tamil News
Home செய்திகள் இணைத்தலைமை குழுவில் இணையப்பேவதில்லை – சிறீலங்கா

இணைத்தலைமை குழுவில் இணையப்பேவதில்லை – சிறீலங்கா

எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை முன்வைப்பதற்கு பிரித்தானியா, மொன்ரோநீக்குரோ, வடமசடோனியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் இணைந்து கொள்ளப் போவதில்லை என சிறீலங்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தாம் அதனை நிராகரித்து விட்டதாகவும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

நாம் எதிர்க்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக நாம் இணைந்து கொள்வது அரசியலில் சவாலானது என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Exit mobile version