Tamil News
Home செய்திகள் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு தெரிவான ஈழத்து பெண்

இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு தெரிவான ஈழத்து பெண்

பிரித்தானியாவை சேர்ந்த ஈழத்தமிழ் பெண்ணான அமுருதா சுரேஸ்குமார் 19 வயதுக்குட்பட இங்கிலாந்தின் துடுப்பாட்ட அணிக்கு தெரிவாகியுள்ளார்.

பிரித்தானியாவின் மிடில்செக்ஸ் விளையாட்டு அணியில் விளையாடிவந்த அவர் 7 வயதில் துடுப்பாட்ட அணியில் இணைந்திருந்தார். யாழ் மாவட்டத்தை பூர்வீமாகாக் கொண்ட அமுருதா தற்போது இங்கிலாந்து அணியில் இணைந்துள்ளார்.

எதிர்வரும் வருடம் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெறும் துடுப்பாட்ட போட்டிகளில் கலந்துகொள்ளும் முகமாக அவர் தற்போது பயிற்சி பெற்றுவருவதாக இங்கிலாந்து துடுப்பாட்ட அணி தெரிவித்துள்ளது.

யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான அவரின் தந்தை சிவா சுரேஸ்குமார் கல்லூரியின் துடுப்பாட்ட அணியில் விளையாடியிருந்தார். அங்கு இடம்பெற்ற யாழ் மாவட்டத்திற்கான மிகப்பெரும் துடுப்பாட்ட போட்டியில் அவர் அதிக ஓட்டங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version