Tamil News
Home செய்திகள் அலுவலகங்களுக்கு முகம் மூடாத ஆடைகளுடன் செல்லாலாம் – சிறிலங்கா அமைச்சரவை

அலுவலகங்களுக்கு முகம் மூடாத ஆடைகளுடன் செல்லாலாம் – சிறிலங்கா அமைச்சரவை

முகத்தை மாத்திரம் மூடாமல்   மத  ரீதியிலான   ஆடைகளை  அணிந்து அரச அலுவலகங்களுக்கு    செல்ல முடியும் என்று  அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அரச அலுவலகங்களுக்கு அண்மையில் சுற்றுநிருபம்  வெளியிடப்பட்டிருந்தது. அதில்  பெண்கள்  சேலையும் ஆண்கள் முழுமையான உடையும் அணிந்து செல்ல வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதற்கு எதிராக  பல்வேறு தரப்பினரும்  குரல் எழுப்பியிருந்தனர்.   இதனையடுத்தே  பொது நிர்வாக அமைச்சர்  ரஞ்சித் மத்தும பண்டார  நேற்று   புதிய அமைச்சரவைப் பத்திரத்தை   அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இதில் முகத்தை  மூடாமல்   மத ரீதியிலான   ஆடைகளை   அணிந்து  அலுவலகங்களுக்கு செல்வதற்கான  அனுமதியும்  வழங்கப்பட்டுள்ளது.  இந்த  அமைச்சரவைப் பத்திரம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

Exit mobile version