Tamil News
Home செய்திகள் அமெரிக்காவின் உடன்பாட்டை நிராகரித்தது சிறீலங்கா

அமெரிக்காவின் உடன்பாட்டை நிராகரித்தது சிறீலங்கா

அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் உடன்பாட்டில் கையொப்பமிடுவதில்லை என சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது.

இந்த உன்பாடு தொடர்பில் ஆய்வு செய்த குழுவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அதில் கையொப்பமிடுவதில்லை என்ற தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகவே இதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், ஆனால் அதில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவுடன் பேசப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மிலேனியம் சலஞ் உடன்பாட்டுக்கு எதிராக இந்தியா மிகவும் தீவிரமாக செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version