Tamil News
Home செய்திகள் அமெரிக்காவின் உடன்பாடு இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து

அமெரிக்காவின் உடன்பாடு இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து

ஆசியாவில் படைப் பரம்பலை ஏற்படுத்துவதே அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் திட்டத்தின் நோக்கம். திருமலை துறைமுகம்இ கொழும்பு துறைமுகம் என்பன இதன் பிரதான நோக்கமாக இருக்கின்றது. எனினும் இந்த துறைமுகங்கள் அமெரிக்காவின் கடற்படை கப்பல்களின் நடவடிக்கைகளுக்கு போதுமானது அல்ல.

எனவே இரு துறைமுகங்களையும் சுற்றியுள்ள நிலங்களை கைப்பற்றி துஐறமுகங்களை விரிவுபடுத்துவதுஇ அதன் பின்னர் இரு துறைமுகங்களையும் இணைக்கும் விரைவு நெடுஞ்சாலையை அமைப்பதே அமெரிக்கா உடன்பாட்டின் பிரதான நோக்கம்.நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்திற்கு ஏதுவாக அமெரிக்கா அரசு இரு துறைமுகங்களுக்கும் அண்மையாக உள்ள நிலங்கள் தொடர்பில் தகவல்களை சேகரித்து வருகின்றது.

ஏழு மாவட்டங்களை இணைத்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அதாவது அமெரிக்காவின் உடன்பாடு கைச்சாத்திடப்பட்டால் சிறீலங்காவின் வளங்கள் அனைத்தும் அமெரிக்கா வசம் சென்றுவிடும் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. அதாவது சீனாவின் பிரசன்னத்தை ஆசியாப் பிராந்தியத்தில் முறியடிப்பதே அமெரிக்காவின் திட்டம் என அது மேலும் தெரிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் உடன்பாடானதுஇ இந்தியாவுக்கு மிகப்பெரும் ஆபத்தானது என படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்காவில் அமெரிக்கா படையினர் நிலைகொண்டால் அது இந்தியாவை தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் ஆபத்தாகும். இது இந்தியாவிற்கு நேரிடையான ஆபத்தை ஏற்படுத்தும்.

சீனாஇ இந்தியாஇ ஈரான் என அமெரிக்கா தனது எதிரிகளை வரிசைப்படுத்த இந்த உடன்பாடு உதவும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் சக்திவாய்ந்த மையமாக சிறீலங்கா மாற்றம் பெற்றதே தற்போதைய நெருக்கடிகளுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version