திருச்சி சிறப்பு முகாம் என்னும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 19ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.
மேலும் இவர்களின் பிரதான கோரிக்கை, இந்தியாவில் அகதிகளாக உள்ள தங்களை சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் தண்டனை முடித்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் ன்பதே.
மேலும் இன்று முன்னெடுக்கப்படும் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக “அப்பா” என்ற தலைப்பினை கொண்டு தமது குடும்பங்கள் படும் துன்பதினை ஓவியமாகவும் வசனங்களாகவும் ஒட்டுமொத்த இதயங்களின் சத்தமாகவும் பதிவுசெய்துள்ளனர்.