Tamil News
Home உலகச் செய்திகள் செயற்கை சூரியன் உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள்

செயற்கை சூரியன் உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள்

அணுக்கரு இணைவு மூலம் சூரிய சக்தி உருவாவது போல, செயற்கையாக சூரிய சக்தியை உருவாக்கும் இயந்திரம் ஒன்றை சீன விஞ்ஞானிகள் 1999ஆம் ஆண்டு முதல் ஆராய்வு செய்து வருகின்றனர்.

இதை செயற்கை சூரியன் என்றழைக்கப்படும் “சோதனை ரீதியாக மேம்படுத்திய மீக்கடத்தி டோக்காமாக்“ என்ற இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக சீன விஞ்ஞானிகளே சில ஆண்டுகால முயற்சிக்குப் பின், தரம் வாய்ந்த மீக்கடத்திப் பொருட்களை உருவாக்கியுள்ளனர். இவை அந்த இயந்திரத்தில் பொருத்தப்பட உள்ளன.

இந்த இயந்திரம் எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் முழுமையாகத் தயாராகி விடும் என்றும், 2050ஆம் ஆண்டு முதல் தொழில் முறையில் இதன் மூலமான சக்தி பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Exit mobile version