Tamil News
Home செய்திகள் இலங்கையில் 1000-ஐ கடந்த கொரோனா மரணங்கள்

இலங்கையில் 1000-ஐ கடந்த கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினத்துடன் 1000-ஐ தாண்டியது.

நேற்று இறுதியான 34 கோவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்திருந்தது.

இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் 1015 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 1,47,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version