Home செய்திகள் சிறிதரனுக்கு யோகேஸ்வரன் ஆதரவு – பகிரங்கமாக அறிவித்தாா்

சிறிதரனுக்கு யோகேஸ்வரன் ஆதரவு – பகிரங்கமாக அறிவித்தாா்

sri yoges சிறிதரனுக்கு யோகேஸ்வரன் ஆதரவு - பகிரங்கமாக அறிவித்தாா்இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு தனது ஆதரவை அளிப்பதாக அந்தப் பதவிக்கு போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான சீ.யோகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

சிறீதரன் எம்.பி. மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சென்று தமிழரசு கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்களை சந்தித்தார். அவரின் இந்தப் பயணத்திலேயே தமிழரசின் தலைமை பதவிக்கு போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான சீ.யோகேஸ்வரன் தனது ஆதரவை தெரிவித்தார்.

செட்டிபாளையத்தில் நடைபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுக் கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா. சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய யோகேஸ்வரன், “தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கு சிறீதரனே பொருத்தமானவர். அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்” என்றார். அங்கு உரையாற்றிய சிறீதரன் வடக்கு – கிழக்கு மண்ணில் தமிழர்களுக்கான ஆட்சி முறை அமைவதற்கு முழுமையான செயல்பாடுகளை தமிழரசுக் கட்சி முன்னெடுக்கும்” என்று கூறினார்.

Exit mobile version