Tamil News
Home செய்திகள் கூட்டமைப்பின் பங்காளிகளிடையே முறுகல்;ஒரே இடத்தில் இரு பரப்புரை கூட்டங்கள்

கூட்டமைப்பின் பங்காளிகளிடையே முறுகல்;ஒரே இடத்தில் இரு பரப்புரை கூட்டங்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டினால் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒரே இடத்தில் இரு பிரிவாக நடைபெற்ற சம்பவம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இன்று இடம்பெற்றது.

கூட்டமைப்பின் பங்காளிக்க கட்சியான ரெலோ இறுதி பரப்புரைக் கூட்டத்தை இன்று மாலை புதுக்குடியிருப்புநகர்பகுதியில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.இதற்கு அவர்கள் கூட்டமைப்பின் இன்னொரு பங்காளிக்க கட்சியான புளொட்டை அழைக்கவில்லை.

இதனால் புளொட்டினர் உடனடியா பொலிஸ் நிலையத்தில் அனுமதி பெற்று அதே நகர் பகுதியில் 500 மீற்றர் இடைவெளியில் தமது பிரசார கூட்டத்தை ஆரம்பித்தனர் .

இந்த சம்பவம் கூட்டமைப்பில் உள்ள பங்களிக்க கட்சிகளிடையே இருந்துவரும் முரண்பாடுகளை வெளிப்படுத்தி நிற்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதுவரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கட்சி வேட்பாளர்களை இணைத்து ஒரே மேடையில் பரப்புரை நடவடிக்கைகளை ஒன்றாக மேற்கொள்ளவில்லை என்கதுடன் தேர்தல் விஞ்ஞாபனத்தை கூட வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version