வடமாகாணத்தில் விவசாயப் பண்ணைகளை படையினர் செயற்படுத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் சுமார் 47 விவசாயப் பண்ணைகளை படையினர் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்குளம் பிரதேசத்தில் மட்டும் நுாறு ஏக்கர் நிலப்பரப்பில் படையினர் விவசாயப் பண்ணைகளை நடத்தி வருகின்றனர் தெரிவித்துள்ளார்.