Tamil News
Home செய்திகள் TRO வின் ஆவணங்கள் வவுனியாவில் சிக்கின

TRO வின் ஆவணங்கள் வவுனியாவில் சிக்கின

இன்று (27.05) காலை, வவுனியா மரக்காரம்பளை பகுதியிலுள்ள, பாவனையற்ற வீடொன்றிலிருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு (TRO) சொந்தமான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

படையினர், புலனாய்வு அமைப்பினர் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீட்டை சோதனையிட்ட போது, மேற்படி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அங்கு விடுதலைப் புலிகள் ஆட்சியிலிருந்த போது செயற்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினருக்குச் சொந்தமான அங்கிகள், ஆவணங்கள், மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு என்பனவே மீட்கப்பட்ட பொருட்களாகும்.

Exit mobile version