திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விலாங்குளம் கிராமத்தில் குடியிருப்பதற்கு வீடின்றி தகரக் கொட்டிலில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இக் கிராம மக்கள் பிரச்சினை தீர்க்கப்படுமா?
சுமார் 100 க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வரும் இக் கிராம மக்கள் கூலித் தொழில்களை நம்பியே தங்களது ஜீவனோபாயத்தை கொண்டு செல்கின்றனர்.
1990 களில் ஏற்பட்ட யுத்த வன்முறை காரணமாக வெளியேற்றப்பட்ட இம் மக்கள் 2004 ல் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் தகரக் கொட்டிலில் மழை வெயில் காலங்களில் சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.