Tamil News
Home செய்திகள் கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மூடப்படவுள்ளது

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மூடப்படவுள்ளது

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தை 2023 ஜூலை இறுதிக்குள் மூட நோர்வே அரசு முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்வதற்கான நோர்வேயின் தீர்மானத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா, கொசோவோவில் உள்ள நோர்வே தூதரகங்கள் மற்றும் ஹூஸ்டன் அமெரிக்காவிலுள்ள துணைத் தூதரகங்களும் 2023 இல் நோர்வே வெளியுறவு சேவையின் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version