சர்வதேச ஆட்கடத்தல் கும்பலின் தலைவராக சந்தேகிக்கப் படும் 32 வயது ஆப்கான் நாட்டு நபரை மேற்கு இலண்டனில் இங்கிலாந்தின் தேசிய குற்ற முகமை கைது செய்துள்ளது.
இவர் வாகனங்கள் மூலம் வடக்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியமிலிருந்து இங்கிலாந்துக்கு குடியேறிகளை கடத்தும் செயலில் ஈடுபட்டவர் எனக் கூறப் படுகின்றது.
இங்கிலாந்து குற்ற முகமையின் விசாரணையைத் தொடர்ந்து சட்ட விரோத குடியேற்றத்தில் ஈடுபட்டதாக இவர் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது.