இலங்கை பாராளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் அனுமதி வழங்குவார்களாயின், ஜனாதிபதி பதவி விலக தயார் என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கட்சித் தலைவர் கூட்டத்தில் கூறியதாக, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வில் இன்று (20) கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, கட்சித் தலைவர்களை அழைக்குமாறும், தமது கட்சி அதற்கு அனுமதி வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.