Home செய்திகள் திருச்சி சிறப்பு முகாம்: இலங்கை தமிழர்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசிற்கு USTAG,WTO கோரிக்கை

திருச்சி சிறப்பு முகாம்: இலங்கை தமிழர்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசிற்கு USTAG,WTO கோரிக்கை

இலங்கை தமிழர்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசிற்கு கோரிக்கை

USTAG,WTO, தமிழகம் திருச்சி முகாமில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசிற்கு கோரிக்கை  வைத்துள்ளன. இலங்கை தமிழர்கள், தம்மை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், கடந்த வாரம் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து தமிழக காவல் துறையினரால் அவர்கள் அனைவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழர்கள் உண்ணா நிலை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பல புலம்பெயர் அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதில்,அமெரிக்க தமிழர் செயற்குழு, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எழுதிய கோரிக்கை கடிதத்தில்,

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், உலகத் தமிழர் அமைப்பும்  தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், திருச்சியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது.

அக்கடிதத்தில்,

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version