ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 ஆயிரம் அகதிகளுக்கு உலகெங்கும் இலவசமாக தங்குமிட வசதிகளை ஏர்பின்பி நிறுவனம் ஏற்பாடு செய்து தரும் என அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியான பிரைன் செஸ்கி தெரிவித்திருக்கிறார்.
அதே சமயம், எவ்வளவு காலம் இச்சேவை வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஏர்பிஎன்பி, தங்குமிட சேவைகளை இணைய வழியாக வழங்கி வரும் நிறுவனமாகும்.