Home செய்திகள் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கண்டித்து மன்னாரில் கண்டன போராட்டம் முன்னெடுப்பு

இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கண்டித்து மன்னாரில் கண்டன போராட்டம் முன்னெடுப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை: இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகையினால் இடம் பெற்ற அனர்த்தத்தின் போது யாழ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்த 2 மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கண்டித்து மன்னாரில் கண்டன போராட்டம் இடம் பெற்றுள்ளது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், மாவட்ட இணைப்பாளர் எ.பெனடிற் குரூஸ் தலைமையில்  மன்னார் புதிய பஸ் நிலையத்திற்கு முன் குறித்த போராட்டம் அமைதியான முறையில் இடம் பெற்றது.

இதன் போது யாழ்ப்பாணத்தில் இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறிய வருகையின் போது ஏற்பட்ட அனர்த்தத்தின் போது உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன்,யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் மன்னார் மாவட்ட மீனவர்கள் சார்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version