Home செய்திகள் இன்று வடக்கு கிழக்கு முடக்கம்!

இன்று வடக்கு கிழக்கு முடக்கம்!

தமிழரின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி, தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும்,  இன்றைய கதவடைப்பு போராட்டம்.1 36 இன்று வடக்கு கிழக்கு முடக்கம்!

இன்று யாழ் ஐந்து சந்தியும் முடக்கம்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும்  இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது.

பருத்தித்துறையும் முடக்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ. பி.ஆர். எல். எவ், தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய பசுமை இயங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்தே இன்றைய இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கலைப்பீட மாணவர் ஒன்றியம், வடக்கு, கிழக்கு வணிகர் கழகங்கள், போக்குவரத்துச் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்துள்ளன.

அஞ்சலி நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும்  தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பனவற்றை வலியுறுத்தியும்  இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது.

Exit mobile version