Tamil News
Home செய்திகள் வடக்கு – கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டம்

வடக்கு – கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டம்

தமிழரின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி, தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும், இன்றைய கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ. பி.ஆர். எல். எவ், தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய பசுமை இயங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்தே இன்றைய இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கலைப்பீட மாணவர் ஒன்றியம், வடக்கு, கிழக்கு வணிகர் கழகங்கள், போக்குவரத்துச் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்துள்ளன.

Exit mobile version