தேசிய தாய்ப்பால் வாரம் இன்று முதல் ஆரம்பமாகிறது என இலங்கை குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
உலக தாய்ப்பால் நாள் ஓகஸ்டு முதலாம் திகதி முதல் ஒரு வாரம் தாய்ப்பால் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் தேசிய தாய்ப்பால் வாரம் அமுல்படுத்தப்படும் என சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதை ஊக்குவிப்பது குறித்து விசேட திட்டம் மேற் கொள்ளப்படும் எனவும் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.