Tamil News
Home செய்திகள் முல்லை வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறை;கவனயீர்ப்பு போராட்டம்

முல்லை வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறை;கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் வைத்திய பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை முன்பாக இடம்பெறுகின்றது. தொடர்ச்சியாக தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறையில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு வகையிலும் பின்தங்கி காணப்படும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சீராக இயங்காததால் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படாததன் பின்னணியில் குறித்த போராட்டமானது இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Exit mobile version