இதன்படி, குறித்த பணிகளுக்காக இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதானி நிறுவனம் சமர்ப்பித்துள்ள திட்ட முன்மொழிவுகளை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சரவையினால் பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்தத் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோவோட் மின்சாரத்துக்கு 8.26 அமெரிக்க டொலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்தை நாணய மாற்று விகிதத்துக்கு அமைய, இலங்கை ரூபாவில் செலுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.