Home செய்திகள் கடந்த ஆண்டு 9 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டு விநியோகம்

கடந்த ஆண்டு 9 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டு விநியோகம்

Passport1 கடந்த ஆண்டு 9 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டு விநியோகம்இலங்கையில் கடந்த ஆண்டு 9,10,497 பேர் வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டைப் பெற்றுள்ளதாக குடிவரவுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு வழங்குவதன் மூலம் திணைக்களத்திற்கு கிடைத்த வருமானம் 4,100 கோடி ரூபா என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார் .

நாளொன்றுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் பிரதான அலுவலகம் உட்பட பிராந்திய அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,500-2,700 வரை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பத்தரமுல்லை, வவுனியா, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள குடிவரவு பிராந்திய அலுவலகங்கள் அந்த சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன.

இதேவேளை, கடந்த வருடம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 7,387 என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மற்ற ஆண்டுகளை விட கடந்த ஆண்டு வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version