Tamil News
Home செய்திகள் அமெரிக்க உயர்மட்ட அதிகாரி, ரணில் சந்திப்பு

அமெரிக்க உயர்மட்ட அதிகாரி, ரணில் சந்திப்பு

அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்தும் இலங்கையின் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின் போது, பொருளாதாரத்தை மீண்டும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு அரசியல் விருப்பமும் வலுவான நடவடிக்கைகளும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் நேற்று  இலங்கைக்கு பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், அரசாங்கப் பிரதிநிதிகளையும் பொருளாதாரத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

இலங்கையில் பொருளாதார மீட்சிக்கான முன்னோக்கி செல்லும் வழியை மையமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version