குடியேறிகள் வருகை, அகதிகள் பிரச்சினை, இணையப் பாதுகாப்பு உள்ளிட்டவை மலேசியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய சவால்களின் பட்டியலில் மலேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் வரிசைப் படுத்திள்ளது.
“குடியேறிகள் மற்றும் அகதிகள் வருகையினால் தங்களது உரிமைகள் பறிக்கப்படும் என்று மலேசியர்கள் எண்ணுகின்றனர். சில தொழில்களை குடியேறிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையும் காண முடிகிறது,” என பாதுகாப்பு கவுன்சிலின் துணை இயக்குனர்-ஜெனரல் Rodzi Md Saad தெரிவித்திருக்கிறார்.