Tamil News
Home செய்திகள் வட, கிழக்கில் இன்று கதவடைப்பு போராட்டம் 

வட, கிழக்கில் இன்று கதவடைப்பு போராட்டம் 

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கதவடைப்பு போராட்டம் இடம்பெறுகின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று 25ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் மக்களும், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்க முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் யாழ்ப்பாண நகரம் முழுமையாக முடங்கியதுடன் சங்கானை பகுதியிலும் கடைகள் மூடப்பட்டமையால் சங்கானை நகரமும் முடங்கியது. அத்துடன் மானிப்பாயிலும் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையால் மானிப்பாயும் முடங்கியுள்ளது.

Exit mobile version