Home செய்திகள் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் – நீண்ட வரிசையில் இருந்தே எரிபொருளைப் பெறும் நிலை

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் – நீண்ட வரிசையில் இருந்தே எரிபொருளைப் பெறும் நிலை

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்

இலங்கை முழுவதும் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வரும் நிலையில் வடமராட்சியில் பொதுமக்கள் நீண்ட வரியில் நின்றே பெற்றோலை பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவிவருகிறது. இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்து கொண்டிருப்பினும் மக்களுக்கு இயல்பான நிலையில் எரிபொருளை விநியோகிக்கும் வகையில் நிலமை சீராகவில்லை.

இந்நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்ப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என் கடந்த தினத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

விலை அதிகரிப்பிற்கு பின்னர் பெற்றோல் விநியோகம் என்பது தடையில்லாது கிடைக்கும் நிலை கடந்த  தினங்களில் இருந்து வந்த நிலையில் தற்போது விடுக்கப்பட்ட அறிவிப்பை அடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்தே பெற்றோலையும் பெற்றுக்கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வடமராட்சி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தே பெற்றோலை பெற்றுக்கொள்வதனை அவதானிக்க முடிந்தது.

நேற்றைய தினம் இவ்வாறு மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றோலை மட்டுப்படுத்தப்பட்ட அளிவல் தன்னும் பெற்றுக்கொண்ட போதிலும் இன்று சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடமராட்சி பகுதியில் டீசல் மற்றும் மண்ணெய் விநியோகம் பலநாட்களாக இடம்பெறாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version