பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாணக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பெரும்பான்மை மாணவர்களால் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இன்று காலை யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது அரசிற்கு எதிராக பதாகைகளை தாங்கியாறு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.