Tamil News
Home செய்திகள் இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை உலக வங்கி வழங்கும் என தகவல்

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை உலக வங்கி வழங்கும் என தகவல்

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் கூட்டத்தில் இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் டொலர்களை உலக வங்கி அங்கீகரிக்கும் என  தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கிடைக்கும் மிகப்பெரிய நிதி இதுவென ரொய்ட்டர்ஸ், செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிதியில், 500 மில்லியன் டொலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காகவும் 250 மில்லியன் டொலர்கள் இரண்டு தவணைகளில் கிடைக்கும் என்றும் உலக வங்கி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வு ஆகியவற்றை உலக வங்கி அவதானித்து வருகின்றது.

இதனை அடுத்து நிர்வாகக் கூட்டத்தில்அனுமதி கிடைத்தவுடன் முதல் தவணை இலங்கைக்கு உடனடியாக வழங்கப்படலாம் என உலக வங்கி வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version