பாராளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து நுழைவாயில்களும் வீதித் தடைகள் போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறவுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் (20) பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,பாராளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அனைத்து நுழைவாயில்களும் வீதித் தடைகள் போட்டு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.