வங்கதேச முகாம்களில் உள்ள ஆயிரக் கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளுக்கு அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்த வங்கதேச அரசு திட்டமிட்டு ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசிகள் கிடைப்பதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் முதல் ரோஹிங்கியா அகதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக வங்கதேச அகதிகள் நிவாரண ஆணைக்குழு ஷா ரெஸ்வான் ஹயத் தெரிவித்திருக்கிறார்.
முதல் கட்டமாக, ஐ.நா. உதவியுடன் 55 வயதுக்கு மேற்பட்ட 50 ஆயிரம் அகதிகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு ள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.