Tamil News
Home செய்திகள் இலங்கை-தூதரக சேவைகள் மூன்று நாட்களுக்கு மட்டுப் படுத்தப் படுவதாக அறிவிப்பு

இலங்கை-தூதரக சேவைகள் மூன்று நாட்களுக்கு மட்டுப் படுத்தப் படுவதாக அறிவிப்பு

தூதரக சேவைகள் மூன்று நாட்களுக்கு மட்டுப் படுத்தப்படுவதாக அறிவிப்பு

தூதரக சேவைகளை வழங்குவது இன்று முதல் ஜூலை 10 வரை மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அறிக்கையின்படி, தூதரகப் பிரிவு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே பொதுமக்களுக்குத் திறக்கப்படும்.

இதேவேளை யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களிலுள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களும் இந்த நாட்களில் சேவைகளை வழங்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version