Home செய்திகள் யாழ்பாணத்திற்கு பயணம் செய்யும் சீனத் தூதுவர்- வவுனியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

யாழ்பாணத்திற்கு பயணம் செய்யும் சீனத் தூதுவர்- வவுனியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

வவுனியாவில் பாதுகாப்பு

இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் இன்று (15) யாழ்பாணத்திற்கு பயணம் செய்வதையடுத்து வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் தூதுவர் கீ சென்ஹொங் சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட மீனவர்களிற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று வடக்கிற்கு பயணம் செய்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைகளின் தலைமையகத்திற்கு இன்று காலை வருகைதந்த அவர் அங்கிருந்து யாழ்நோக்கி பயணமானார்.

அவரது வருகைக்காக வவுனியா நகரப்பகுதி உட்பட பல்வேறு பகுதிகளிலும், வீதிகளிலும் இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

Exit mobile version