“கொத்தலாவலை சட்டமூலத்தை இரத்து செய், வடக்கு கிழக்கு உட்பட முழு நாட்டிலும் இராணுவ மயமாக்கலை நிறுத்து” போன்ற இரு கோரிக்கைகளையும் முன்வைத்து மேற்கொள்ளவிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு நகரில் நாளை (05) மாலை 4.30 மணிக்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெறவுள்ளது.
குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.