Tamil News
Home செய்திகள் அவசர கால சட்டத்தை இரத்து செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

அவசர கால சட்டத்தை இரத்து செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

அவசரகால சட்ட பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் அரச தலைவரிடம் கோரியுள்ளது.

சமகால நிலைமைக்கு அவசரகால சட்டம் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் , கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுக்கூடுதல் என்பன பொதுமக்களின் அடிப்படை உரிமைகளாகும்.

இந்த நிலையில், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல் என்பனவற்றுக்கு, அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது.

Exit mobile version