குறித்த ஆர்ப்பாட்டத்தில்,
எரிபொருள் விலையை அதிகரிக்காதே, விவசாயிகள், கடற் றொழிலாளர்களுக்கு மானியம் வழங்கு, ஏழைகளை வஞ்சிக்காதே, அத்தியாவசிய பொருட்களுக்கு விலை அதிகரிக்காதே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விரைந்து முடிவு சொல், ஜனநாயக போராட்டங்களை நசுக்காதே, கொரோனாவை காட்டி பொய் வழக்கு போடாதே, கொத்தலாவலை பல்கலைக்கழக சட்ட மூலத்தை மீளப்பெறு, ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை வேண்டும்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினர் மத தலைவர்கள் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பங்கு பற்றினார்கள்.
அதே நேரம் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அந்த காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் நினைவாக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப் பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதக அரசே படுகொலை அரசே தண்டிக்க ப்படுவாய், நீதி ஒருநாள் தலை நிமிரும், கொலைகார்கள் தண்டிக்கப்பட வேண்டும், சுயநிர்ணய உரிமை தமிழர்களிற்கும் உண்டு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.