15 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளார்
யாழ்ப்பாணம் – வேலணை, சரவணைப் பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்றுறை காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து காணாமல் போன சிறுமியைத் தேடும் பணியை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.