Tamil News
Home செய்திகள் எழுத்து மூலம் உத்தரவாதம் தரும் வேட்பாளருக்கே ஆதரவு – விக்கினேஸ்வவரன்

எழுத்து மூலம் உத்தரவாதம் தரும் வேட்பாளருக்கே ஆதரவு – விக்கினேஸ்வவரன்

தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எழுத்து மூலமான உத்தரவாதங்களைத்தரும் கட்சிக்கும் அதன் வேட்பாளருக்குமே தமது அதரவு-களை வழங்கப்போதவாக வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான திரு சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் நேற்று (14) அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எமது கட்சி வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை ஆனால் நாம் தேர்தலில் பங்கெடுப்போம். வடக்கு கிழக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், புத்தர் சிலைகளை நிறுவுதல், சிங்களக் குடியேற்றங்களை அமைத்தல் என்பன நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், 120 பேர் வரையில் தற்போதும் சிறையில் உள்ளனர். பல குற்றங்களைச் செய்த கருணா அம்மான் அரசியல்வாதிகளின் முன்னனி வரிசையில் அமர்ந்துள்ளபோது, கைதிகளை விடுவிப்பதில் என்ன பிரச்சனையுள்ளது.

காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் மற்றும் போர்க்குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் இதுவே எமது கோரிக்கைகள்.

நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, அதனால் பெறப்படும் சில ஆயிரம் வாக்குகளால் நன்மையில்லை. ஆனால் ஒரு மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version