Tamil News
Home உலகச் செய்திகள் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த தமது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே நாராயணசாமி வெளிநடப்பு செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதனால் நாராயணசாமி அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதன் மூலம் புதுச்சேரியின் 14ஆவது சட்டப்பேரவை காலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

Exit mobile version