Tamil News
Home உலகச் செய்திகள் ஆப்கான் சிறையிலிருந்து 500 தலிபான்கள் விடுதலை 

ஆப்கான் சிறையிலிருந்து 500 தலிபான்கள் விடுதலை 

பக்ரித் பண்டிகையை முன்னிட்டும்,போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படியும் சிறையிலுள்ள 500 தலிபான்கள் விடுவிக்கப்பட உள்ளனர் என ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, “ஆப்கானிஸ்தானில் பக்ரித் திருநாளை முன்னிட்டும்இ போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் 500 தலிபான்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.

நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவிற்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

தற்போது பக்ரித் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

Exit mobile version