Tamil News
Home செய்திகள் 40,000 பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் பச்சைக்கொடி காட்டியது தேர்தல் ஆணையகம்

40,000 பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் பச்சைக்கொடி காட்டியது தேர்தல் ஆணையகம்

40,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மேற்கொள்ள தேசிய தேர்தல் ஆணையம் பொது நிர்வாக அமைச்சகத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தபால் சேவை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சுமார் 42,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பட்டதாரி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏற்கனவே சுமார் 15,000 நியமன கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டநிலையில் அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

ஆனால் தமது ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற வேலைவாய்ப்பு திட்டங்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

Exit mobile version