சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த மரணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றுமுன்தினம் உயிரிழந்த 171 பேரில் 102 ஆண்களும், 69 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதில் ஆண்கள் இருவர் 30 வயதுக்குட்பட்டவர். 23 ஆண்கள், 12 பெண்கள் என 35 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 134 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 77 ஆண்களும், 57 பெண்களும் அடங்குகின்றனர்.