திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் என்னும் தனி சிறையில் ஈழத்தமிழர்கள் 78 பேர் காத்திருப்பு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றர்கள்.
15வது நாளாகத் தொடரும் இப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தாங்கள் அடைக்கப்பட்ட பகுதிக்குள் தங்களின் விடுதலையை வேண்டி கோஷங்கள் எழுப்பியும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.