Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியாவில் பாரம் தூக்கி சரிந்ததில் 11 பேர் சாவு

இந்தியாவில் பாரம் தூக்கி சரிந்ததில் 11 பேர் சாவு

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனத்தில் கிரேன் சரிந்து விபத்துக்கு உள்ளானதில் 11 பேர் பலியானதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

விசாகப்பட்டினம் காவல் துணை ஆணையர் சுரேஷ் பாபு இந்த விபத்தை உறுதி செய்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.

70 டன் எடைக் கொண்ட அந்த கிரேனின் சுமையை ஊழியர்கள் பரிசோதனை செய்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.

Exit mobile version