Home செய்திகள் வெடுக்குநாறிமலையின் அற்புதங்கள்!

வெடுக்குநாறிமலையின் அற்புதங்கள்!

வவுனியா வடக்கின் நெடுங்கேணி நகரிலிருந்து சுமார் ஏழு கிலோமீற்றர்கள் தூரத்தில் அமைந்திருக்கின்ற ஒலுமடு கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வெடுக்குநாறிமலை.

300 மீட்டர் உயரமான வெடுக்குநாறிமலையின் அடிவராத்தில் கேணி, தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் என்பன அதன் வரலாற்றைக் கூறுகின்றது.

இங்கு சிவலிங்கத்துடன் சேர்ந்து வினாயகர், அம்மன், வைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சிலை வைத்து வழிபடுகின்றார்கள் கிராம மக்கள்.

ஆனால் இப்போது இந்த ஆலயத்தில் வழிபாடுகளை செய்ய தொல்பொருளியல் திணைக்களம் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2020 09 24 at 10.01.57 PM 1 வெடுக்குநாறிமலையின் அற்புதங்கள்!

வெடுக்குநாறிமலை உச்சியிலே அமைந்திருக்கும் ஆதி லிங்கேஸ்வரரின் திருவுருவம்.

வெடுக்குநாறிமலை லிங்கேஸ்வரர் ஆலயத்தின் இயற்கைத் தீர்த்தக்கிணறு. ஒரு மனிதனை மூடக்கூடிய அளவிற்கு நீர் நிறைந்து காணப்படுகின்ற சிறு நீர்த்தடாகத்தில் நீர் வற்றாமல் எப்பொழுதும் நிறைந்திருக்கும் என்கின்கின்றார்கள் கிராம மக்கள்.

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் மலை அடிவார பிள்ளையார்.

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் உச்சியில் அமைந்திருக்கும் இயற்கை பாறை தொடர்.

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் கரடுமுரடான ஒற்றையடிப்பாதை.

Exit mobile version