Home செய்திகள் விடுவித்த காணிகளுக்குள் மக்கள் பிரவேசிப்பதற்கான வீதிகள் திறப்பு

விடுவித்த காணிகளுக்குள் மக்கள் பிரவேசிப்பதற்கான வீதிகள் திறப்பு

04 விடுவித்த காணிகளுக்குள் மக்கள் பிரவேசிப்பதற்கான வீதிகள் திறப்புயாழ்ப்பாணம், தெல்லிப்பழை, ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர், மேலதிக மாவட்ட காணி செயலாளர் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ஆகியோர் கடந்த 7 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடியதற்கு அமைவாக, இரண்டு வீதிகள் திறக்கப்பட்டுள்ளன.

பொன்னாலை – பருத்தித்துறை கடற்கரை வீதியில் பலாலி வடக்கு பாடசாலை வீதியும், விமான நிலைய வீதியில் மருதடி சந்தியிலிருந்து பலாலி நோக்கிச் செல்லும் வீரப்பளை வீதியும் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக விமான நிலைய வீதி ஊடகவும், ஒட்டகப்புலம் பிரதான வீதியூடாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குச் செல்ல ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வசாவிளான் கிழக்கு(Nஜு244), வசாவிளான் மேற்கு (Nஜு245), பலாலி வடக்கு (Nஜு254), பலாலி கிழக்கு (Nஜு253), பலாலி தெற்கு (Nஜு252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.8 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது.

இங்கு வசித்த 327 குடும்பங்கள் காணி உரிமை கோரி பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் 171 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தித் துப்பரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், ஏனைய மக்களும் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி, துப்பரவுப் பணிகளை ஆரம்பிக்க மிக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

Exit mobile version